வார ராசி பலன் 05-12-2019 முதல் 11-12-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து அருள்புரிகிறார். நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண்பீர்கள். தொழில், வியாபாரம் அற்புதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வேறு வேலைக்கு முயல்பவர்களுக்குரிய காலகட்டம் இது. பிள்ளைகளிடம் அன்பாக இருங்கள். பெண்களுக்கு, சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து எதையும் தீர ஆலோசித்து ஈடுபட வேண்டும். மாணவர்களுக்கு, தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் தொடர்பில் கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி l
திசைகள்: கிழக்கு, தெற்கு l
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு l
எண்கள்: 1, 3, 9 l
பரிகாரம்: முருகனுக்குப் பால் பாயசம் படைத்து வணங்கிவர இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் பொன், பொருள் சேர்க்கையைத் தரும். அதேவேளையில் அடுத்தவர்களுக்கு உதவப்போய் வில்லங்கம் ஏற்படலாம். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். பெண்களுக்கு, எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு சிறிய வேலையையும் செய்து முடிப்பதற்கு, கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் திட்டமிட்டுப் படிப்பீர்கள். சக மாணவர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 3, 6
பரிகாரம்: அம்மனை வணங்க எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை ராசிநாதன் புதன் - குரு - சனி - சுக்கிரன் பார்க்கிறார்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம், மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினரிடம் கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். பெண்களுக்கு, அனைத்துக் காரியங்களிலும் நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களை உடனடியாகப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர், சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன்வினைக் கர்மங்கள் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ரண ருண ரோகஸ்தானம் வலுவாக இருப்பதால் உடல் அசதி ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். வாடிக்கையாளர்களுக்குத் தரும் உத்தரவாதங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேலதிகாரிகள் உங்களிடம் குறை காணலாம். குடும்பாதிபதி சூரியன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சண்டைகள் அகலும். கணவன் மனைவிக்குள் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு, காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, சகாக்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத் துறையினர் கடின உழைப்பின் பலனை உணர்வார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப் போக்கு மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்கப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் புதன் சாரம் பெற்று சுகஸ்தானத்தில் இருக்கிறார். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் சுணக்க நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் குறையும். இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அந்தஸ்துள்ள பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, திறமைக்கேற்ற புகழும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் மனக்கசப்பு மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் குரு - சுக்கிரன் - சனி - கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு, மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணத் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 3, 5, 9
பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்துக்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

19 mins ago

விளையாட்டு

11 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்