இறைத்தூதர் நபிகள் தனது இளம்வயதிலேயே மக்காவிலுள்ள ஆடுகளை மேய்க்கத் தொடங்கி வருவாய் ஈட்டத் தொடங்கினார். நபிகளை வளர்த்த மாமா அபு தலீப் பெரும் பணக்காரர் அல்ல. அதனால் நபிகளுக்கு அந்த வருவாய் தேவையாக இருந்தது.
பிற்காலத்தில், நபிகள் தனது தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, மேய்ப்பராகப் பணியாற்றாத யாரும் இறைவனின் தூதராக ஆகமுடியாதென்று கூறினார். நபித்தோழர்கள் ஆச்சரியமடைந்து, அப்படியா? என்றனர்.
“ஒரு மனிதர் காட்டுக்கோ வயல்களுக்கோ தனது கால்நடைகளுடன் செல்லும்போது, அவர் இயற்கைக்கு அருகில் செல்வார். அங்கேதான் படைப்பு குறித்த எண்ணம் அவருக்குத் தோன்றும். மலைகளின் அகன்ற எழிலைப் பார்ப்பார். படைப்பவனுக்கு அருகில் செல்ல அந்த மனிதனை அதுவே தூண்டும்.” என்றார் நபி.
- பவி
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 mins ago
தமிழகம்
21 mins ago
இணைப்பிதழ்கள்
38 mins ago
இணைப்பிதழ்கள்
49 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago