செப்.17-ல் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஸ்டீவ் ஸ்மித் தலைமை ஆஸ்திரேலிய அணி செப்.17 முதல் இந்தியாவில் 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு எதிராக தொடங்குகிறது.

முதல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 21-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 2வது போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 24-ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் 3-வது போட்டி நடைபெறுகிறது. இதன் பிறகு 3 நாட்கள் சென்று பெங்களூருவில் 4வது போட்டியும் அக்டோபர் 1-ம் தேதி நாக்பூரில் 5 வது போட்டியும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிசிசிஐ இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. முதல் டி20 போட்டி ராஞ்சியில் அக்டோபர் 7-ம் தேதியும் குவஹாத்தியில் 10-ம் தேதி 2-வது போட்டியும், ஹைதராபாத்தில் அக்டோபர் 13-ம் தேதி 3-வது போட்டியும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்