பட்டம் வெல்வாரா பி.வி.சிந்து?

By பிடிஐ

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, இதில் வென்று இந்த சீசனின் 3-வது சூப்பர் சீரிஸ் பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு பாட்மிண்டன் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ரூ.21 கோடி பரிசுத்தொகை கொண்ட ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் மகளிருக்கான பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சமீப காலமாக மிகச் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டங்களை வென்றுவரும் பி.வி.சிந்து, இத்தொடரிலும் வென்று இந்த சீசனில் தனது 3-வது பட்டத்தை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு பாட்மிண்டன் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முதல் சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனையான மினட்சு மிடானியை எதிர்கொள்கிறார்.

மற்றொரு வீராங்கனையான சாய்னா நெவால், முதல் சுற்றில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோசுவாங்கை எதிர்கொள்கிறார். முதல் சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் 2-வது சுற்றில், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை அவர் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

ஆண்களுக்கான பிரிவில் நடக்கும் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன வீரரான டியான் ஹுவேயை எதிர்கொள்கிறார். இந்திய வீரர்களான பாருப்பள்ளி காஷ்யப், பிரணாய், சாய் பிரணீத் ஆகியோரும் இத்தொடரில் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்