நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி உள்ளது. அதையடுத்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் சோபிக்காத வீரர்களை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சிலரோ ‘இந்நேரம் தோனி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?’ என முன்னாள் கேப்டன் தோனியின் புகழை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக் கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்று ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். அது வரலாறு.
மொத்தம் 9 ஐசிசி தொடர்களில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி இந்த 3 வெற்றிகளை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இப்போது அவரை தான் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்திய அணி வென்றுள்ள 5 ஐசிசி தொடர்களில் மூன்றில் தோனி தான் கேப்டன்.
தோனி குறித்து இப்போது ரசிகர்கள் பகிர்ந்துள்ள சில சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ள கருத்துகள்..
The man always comes in our mind when our team sucks every time. #T20WorldCup#chokers #Dhoni #INDvsENG #MSDhoni pic.twitter.com/JmSAuAwiLF
— traped (@Ankit20318) November 10, 2022
இப்படியாக தோனி குறித்த பதிவுகள் நீள்கின்றன. கடந்த 2019 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அதன் பிறகு அவர் ஓய்வை அறிவித்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
12 hours ago
சினிமா
13 hours ago
இந்தியா
13 hours ago