ஆசிய கோப்பை | இறுதிசுற்றில் பாகிஸ்தான்-இலங்கை

By செய்திப்பிரிவு

துபாய்: ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றுமுன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 130 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 118 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் ஃபசல்ஹக் பரூக்கி வீசிய கடைசி ஓவரின் முதல் இரு பந்துகளை சிக்ஸருக்கு விளாசி வெற்றியை வசப்படுத்தினார் நசீம் ஷா.

பாகிஸ்தான் அணிக்கு இது2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணிஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் முடிவால் இந்தியா தனது கடைசி ஆட்டத்துக்கு முன்னதாகவே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. சூப்பர் 4 சுற்றில் இந்தியஅணியானது பாகிஸ்தான், இலங்கையிடம் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்ததால் 4 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தது. 11-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்