ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி முதல் ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக 1-1 என டிராவில் முடித்த நிலையில் 2-வது ஆட்டத்தில் 2-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் தனது 2-வதுஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் குறைந்தது 16 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட இந்திய அணி கோல் மழை பொழிந்தது. திர்கே திப்சன் 4 கோல்களும், பெலிமக்கா சுதேவ் 3 கோல்களும், செல்வம் கார்த்தி, விட்டலாச்சார்யா சுனில், ராஜ்பர் பவன் ஆகியோர் தலா 2 கோல்களும் உத்தம் சிங், நிலம் சஜீப், பிரேந்திர லக்ரா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அசத்த இந்திய அணி 16-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் சுற்று லீக் ஆட்டத்தின் முடிவில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றன. இருப்பினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணி 19 கோல்களை அடித்த நிலையில் 6 கோல்களை வாங்கியிருந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் 16 கோல்கள் அடித்த நிலையில் 4 கோல்களை வாங்கியிருந்தது.
2-வது சுற்றுக்கு ‘ஏ’பிரிவில் இருந்து ஜப்பான், இந்தியாவும் ‘பி’ பிரிவில் இருந்து மலேசியா, தென் கொரியாவும் தகுதி பெற்றுள்ளன. இந்த சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுலா
6 hours ago