இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

By செய்திப்பிரிவு

சஷாங்க் மனோகர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் அனுராக் தாக்கூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்பு செயலர் பதவி வகித்த அனுராக் தாக்கூருக்குப் பதிலாக தற்போது அஜய் ஷிர்கே பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிசிசிஐ பதவிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர்தான் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்பது 3 வாரங்களுக்கு முன்பே முடிவானது.

அஜய் ஷிர்கே, கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் பொருளாளர் பதவியிலிருந்து அஜய் ஷிர்கே ராஜினாமா செய்தார். ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்த போது நடந்த ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷிர்கே செயலராக திரும்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்