IPL 2022 | சிஎஸ்கே தோல்வி முகம் - வலுவான நிலையில் ஹைதராபாத்

By செய்திப்பிரிவு

மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 154 ரன்கள் எடுத்தது. நடப்பு சீசனின் முதல் மூன்று போட்டிகளையும் தோல்வியை தழுவியுள்ளது சென்னை அணி, இந்தப் போட்டியிலும் தோல்வி முகம் கண்டுள்ளது.

மும்பையில் டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் நடப்பு சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் தங்கள் அணி பந்து வீசும் என தெரிவித்தார். அதனால், சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.

இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் 16 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் மொயின் அலி மற்றும் ராயுடு. 27 ரன்கள் எடுத்து அவுட்டானார் ராயுடு. தொடர்ந்து 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார் மொயின் அலி.

பின்னர் பேட் செய்த ஜடேஜா 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனி மற்றும் தூபே 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது சென்னை.

ஹைதராபாத் அணிக்காக நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். தற்போது அந்த அணி 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை குவித்துள்ளது அந்த அணி.

அப்டேட் ரிப்போர்ட் > சிஎஸ்கே அணிக்கு 4-வது தோல்வி: அபிஷேக் ஷர்மா அதிரடியில் ஹைதராபாத் வெற்றி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

கருத்துப் பேழை

4 mins ago

சுற்றுலா

41 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்