வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

By செய்திப்பிரிவு

மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. கேப்டன் மிதாலி ராஜ் 42, வனிதா 38, மன்பிரித் கவுர் 40 ரன்கள் எடுத்தனர். கிருஷ்ணமூர்த்தி 36, கவுஸ்வாமி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

164 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியால் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷார்மின் 21, ஆயிஷா ரஹ்மான் 4, சஞ்ஜிதா 2, ருமானா 12, பஹிமா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பாட்டீல், பூனம் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகியாக மன்பிரித் கவுர் தேர்வானார். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில் வரும் 19ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்