மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. கேப்டன் மிதாலி ராஜ் 42, வனிதா 38, மன்பிரித் கவுர் 40 ரன்கள் எடுத்தனர். கிருஷ்ணமூர்த்தி 36, கவுஸ்வாமி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
164 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியால் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷார்மின் 21, ஆயிஷா ரஹ்மான் 4, சஞ்ஜிதா 2, ருமானா 12, பஹிமா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பாட்டீல், பூனம் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகியாக மன்பிரித் கவுர் தேர்வானார். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில் வரும் 19ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago