கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், யுவராஜ், தோனி என்று எத்தனையோ நட்சத்திர வீரர்களையும், கேப்டன்களையும் இந்திய கிரிக்கெட் கண்டுள்ளது. ஆனால் இந்திய அணியின் முதல் கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர் சி.கே.நாயுடு. இன்று (அக்டோபர் 31) அவரது பிறந்த நாள்.
1895-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிறந்தவரான சி.கே.நாயுடு, இந்தியா சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே கிளப் போட்டிகளில் புகழ்பெற்ற வீரராக இருந்தார். இந்த சூழலில் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து கிடைத்தது. 1932-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டது. முதலில் அணியின் கேப்டனாக போர்பந்தர் மகாராஜாவும், துணைக் கேப்டனாக ஞான்ஷியாம்ஜி என்பவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அணியின் வீரர்கள் பலருக்கும் இது பிடிக்கவில்லை. முன்னிலை ஆட்டக்காரரான சி.கே.நாயுடு கேப்டனாவதைத்தான் அவர்கள் விரும்பினர்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பே இந்த அதிருப்தியைப் பற்றித் தெரியவர போர்பந்தர் மகாராஜாவும், ஞான்ஷியாம்ஜியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக சி.கே.நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது சி.கே.நாயுடுவின் வயது 37.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 secs ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
சுற்றுலா
6 hours ago