முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு ஆயுள் உறுப்பினர் தொகையாக இன்னும் ரூ.1800 செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் சிலர் தோனிக்காக இந்தத் தொகையை அளிக்க முன்வந்தனர், ஆனால் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் அதனை ஏற்கவில்லை.
ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் தகுதிக்கு தோனி ரூ.10,000 கொடுக்க வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து ரூ.11,800. இந்நிலையில் தோனியின் வீட்டுக்குச் சென்ற பிரதிநிதி இதுதெரியாமல் ரூ.10,000 த்திற்கான காசோலையை வாங்கி வந்தார். ஆகவே ரூ.1,800 நிலுவைத் தொகை.
இந்நிலையில் ஷேஷ் நாத் பதக் என்பவர் தலைமையில் சில மாணவர்கள், தோனியின் ரசிகர்கள் நிலுவைத் தொகையைச் சேகரித்து ட்ராப்ட் எடுத்து கொடுத்தனர், ஆனால் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் இந்த ட்ராப்டை ஏற்கவில்லை.
இது குறித்து பதக் கூறுகையில், “அவர்கள் மறுத்து விட்டனர்.. ஆனால் ஏற்பு ரசீது கொடுத்தனர்.” என்றார், இவர் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் முறைகேடுகளை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கச் செயலர் சஞ்சய் சஹாய் கூறும்போது, தோனி அவர்களை தொகையை கொடுக்கச் சொன்னால்தான் நாம் அதனை ஏற்று கொள்ள முடியும். தோனி சொல்லாமல் அவர் சார்பாக வேறு சிலர் கொடுப்பதை எப்படி ஏற்க முடியும்? இந்த ட்ராஃப்டை ஏற்பதில் என் அனுமதியே தேவையில்லை, ஆனால் யார் சார்பாக ட்ராப்ட் எடுக்கப்பட்டதோ அவரின் அனுமதி வேண்டாமா? என்று கேட்டு ரசிகர்கள் திரட்டிய ரூ.1800 தொகையை மறுத்துள்ளதாக தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
விளையாட்டு
25 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
51 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
49 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago