முன்னாள் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் கேப்டன் தினக்கூலியாகப் பணியாற்றும் அவலம்

By ஏஎன்ஐ

இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மாற்றுத் திறனாளியுமான ராஜேந்திர சிங் தாமி தன் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாகப் பணியாற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாமி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “ஒரு கிரிக்கெட் தொடர் இருந்தது, ஆனால் கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. என் தகுதிக்கேற்ப ஏதாவது வேலை கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

இதனையடுத்து உத்தராகண்ட் மாநில பிதோராகர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் விஜயகுமார் ஜோக்தாந்தே, மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாமிக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தாமி தற்போது உத்தராகண்ட் வீல்சேர் அணியின் கேப்டனாவார், முடக்கு வாதத்தினால் இவருக்கு 90% திறனை இழந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்