ரோஹித் சர்மா புதிய மைல்கல்:சச்சின், கங்குலி சாதனை முறியடிப்பு

By செய்திப்பிரிவு

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டி, கங்குலி, சச்சின் சாதனையை முறியடித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில் பெங்களூருவில் இன்று 3-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 4 ரன்கள் சேர்த்தபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ரோஹித் சர்மா தனது 217-வது இன்னிங்ஸில் ஒரு நாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டினார். முதலிடத்தில் விராட் கோலி 194 இன்னிங்ஸிலும், 2-வது இடத்தில் டி வில்லியர்ஸ் 208 இன்னிங்ஸிலும் 9 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். இப்போது 3வது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கங்குலி 228 இன்னிங்ஸிலும், சச்சின்235 இன்னிங்ஸிலும், லாரா 239 இன்னி்ங்ஸிலும், தோனி 244 இன்னிங்ஸிலும் 9 ஆயிரம் ரன்களை எட்டி இருந்தனர். இதில் கங்குலி, சச்சின் சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக ராஜ்கோட் போட்யின் போது, ரோஹித் சர்மா ஒரு சாதனையைப் படைத்தார். அதாவது தொடக்க வீரராகக் களமிறங்கி, அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் சாதனையைத் தனதாக்கினார். சச்சின், ஹசிம் அம்லா ஆகியோரை ரோஹித் பின்னுக்குத் தள்ளினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்