டாடா ஓபன் டென்னிஸில் பெனோயிட் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள டாடா ஓபன் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனோயிட் பைர் கலந்து கொள்கிறார்.

இந்தியாவில் நடத்தப்படும் ஒரே ஒரு ஏடிபி தொடரான டாடா ஓபன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. வழக்கமாக இந்தத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும். ஆனால்இம்முறை திருத்தி அமைக்கப்பட்ட ஏடிபி அட்டவணைப்படி ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகுபிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் பங்கேற்கவில்லை. அதேவேளையில் 2-வது இடம் பிடித்த குரோஷியாவின் இவோ கார்லோவிக் கலந்து கொள்கிறார்.

மேலும் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனோயிட் பைர், 74-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் பிலிப் ஹோல்ஸ்ரைபர், செக் குடியரசின் ஜிரி வெஸ்லி, லிதுவெனியாவின் ரிக்கார்டாஸ் பெரான்கிஸ், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியா, சால்வடோர் கருசோ, தாமஸ் ஃபேபியானோ, கொரியாவின் சூன் வூ குவான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

29 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்