மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள டாடா ஓபன் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனோயிட் பைர் கலந்து கொள்கிறார்.
இந்தியாவில் நடத்தப்படும் ஒரே ஒரு ஏடிபி தொடரான டாடா ஓபன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. வழக்கமாக இந்தத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும். ஆனால்இம்முறை திருத்தி அமைக்கப்பட்ட ஏடிபி அட்டவணைப்படி ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகுபிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் பங்கேற்கவில்லை. அதேவேளையில் 2-வது இடம் பிடித்த குரோஷியாவின் இவோ கார்லோவிக் கலந்து கொள்கிறார்.
மேலும் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனோயிட் பைர், 74-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் பிலிப் ஹோல்ஸ்ரைபர், செக் குடியரசின் ஜிரி வெஸ்லி, லிதுவெனியாவின் ரிக்கார்டாஸ் பெரான்கிஸ், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியா, சால்வடோர் கருசோ, தாமஸ் ஃபேபியானோ, கொரியாவின் சூன் வூ குவான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
21 mins ago
தமிழகம்
38 mins ago
வாழ்வியல்
29 mins ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago