ஐ லீக் கால்பந்து தொடர்: சென்னை சிட்டி எஃப்சி, அய்சால் ஆட்டம் டிரா

By செய்திப்பிரிவு

`ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், சென்னை சிட்டி எஃப்சி அணியும், அய்சால் எஃப்சி அணியும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடர் நாட்டின் பல்வேறு நகரங் களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அய்சாலில் நடைபெற்ற ஆட்டத்தில் சென் னை சிட்டி எஃப்சி அணியும், அய் சால் எஃப்.சி அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே அய்சால் எஃப்சி அணி ஒரு கோல் போட்டது. அந்த அணி வீரர் வில்லியம் லால்னுன்பெலா, பந்தைத் தட்டிச் சென்று கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன் னிலை பெற்றது.

இதையடுத்து கோலடிக்க சென்னை சிட்டி எஃப்சி அணி வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் சென்னை வீரர் ராபர்ட்டோ எஸ்லாவா ஒரு கோல் போட்டார். இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

2-வது பாதியில் எந்த கோலும் விழவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்