இந்திய அணியில் இடம்பெறாதது குறித்த சஞ்சு சாம்சனின் மறைமுக ட்வீட்: ரசிகர்கள் ஆதரவு

By செய்திப்பிரிவு

மேற்கு இந்திய அணிகளுக்கு எதிராக உள்நாட்டு டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ஷிகர் தவண் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த போட்டிகளில் அணியில் இடம்பெற்றிருந்தும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்காத நிலையில் சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளிப்படுத்தினார்.

அணியில் இடம்பெறாத ஏமாற்றத்தை சஞ்சு சாம்சன் வார்த்தைகளால் விவரிக்கவில்லை. அதற்கு மாறாக புன்னகைக்கும் ஸ்மைலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனின் ட்வீட்டின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அவர் பதிவுக்குக் கீழே, ''தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்'', ''நம்பிக்கையுடன் இருங்கள் சஞ்சு சாம்சன். நீங்கள் அணியில் நிச்சயம் இடம்பெறுவீர்கள்'' என்று அவருக்கு ஆதரவான பதிவுகளைப் பதிவிட்டனர்.

மேலும், இந்திய அணியின் தேர்வுக் குழுவையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்