திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான 5 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் ஷிகர் தவண் ஷாட் ஒன்றை ஆடும்போது பின் கழுத்தில் பந்து தாக்கியதில் நிலைதடுமாறினார்.
தென் ஆப்பிரிக்க பவுலர் பியூரன் ஹென்றிக்ஸ் வீசிய பந்து ஒன்றை பின்பக்கமாக ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார் ஷிகர் தவன் ஆனால் பியுரன் ஹென்றிக்ஸ் தவண் நகர நகர பந்தையும் அவரை நோக்கி நகர்த்தி லெந்தையும் குறுக்கினார் இதனால் சற்றே அதிர்ச்சியடைந்த ஷிகர் தவன் பந்திலிருந்து பார்வையை எடுத்து விட்டார்.
இதனையடுத்து பின் கழுத்தில் ‘மட்’ என்று பந்து தாக்கியது. இதனால் அவர் ஹெல்மெட்டைக் கழற்றி அந்த இடத்தைத் தேய்த்துக் கொண்டார்.
ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்திற்குள் உடற்கூறு மருத்துவர் வந்தார். ஷிகர் தவணுக்கு சிறிய சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து தவண் தன் இன்னிங்சைத் தொடர்ந்தார்.
இந்தியா ஏ அணி தொடரை ஏற்கெனவே கைப்பற்றியது. கடைசி 2 போட்டிகளுக்கு ஷிகர் தவண் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டார். 4வது போட்டியில் தவண் 52 ரன்கள் எடுத்தார் ஆனால் இந்தியா ஏ தோற்றுப் போனது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
உலகம்
12 hours ago