சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஜுவென்டஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சி லோனா அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கங்களின் (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், இத்தாலி யின் ஜுவென் டஸ் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பார்சிலோனா முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நடுக்கள வீரர் ராக்டிக் கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் 54-வது நிமிடத்தில் ஜுவென்டஸ் அணியின் மொராட்டா கோல் அடித்தார்.
ஆனால், பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரெஸ் 68-வது நிமிடத்திலும், கூடுதல் நேரத்தில் நெய்மரும் தலா ஒரு கோல் அடிக்க 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 mins ago
வணிகம்
26 mins ago
இந்தியா
28 mins ago
சினிமா
34 mins ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago