சென்னை பூந்தமல்லியில் உள்ள பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் குகேஷ், ஹர்ஷினி உள்ளிட்டோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி ஆடவர், மகளிர் என இரு பிரிவினருக்கும் தலா 6 பிரிவுகளில் நடத்தப்பட்டது. 9 வயது ஆடவர் பிரிவில் குகேஷும், மகளிர் பிரிவில் ஹர்ஷினியும், 11 வயது ஆடவர் பிரிவில் சர்வேஷ் குமாரும், மகளிர் பிரிவில் கீர்த்தனாவும், 13 வயது ஆடவர் பிரிவில் அர்ஜுனும், மகளிர் பிரிவில் லட்சுமியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
15 வயது ஆடவர் பிரிவில் ஹேமந்த் ராமும், மகளிர் பிரிவில் ஸ்நேகாவும், 17 வயது ஆடவர் பிரிவில் சாய் விஷ்வேஸும், மகளிர் பிரிவில் தாமரை செல்வியும், 19 வயது ஆடவர் பிரிவில் யோகித்தும், மகளிர் பிரிவில் பால கண்ணம்மாவும் சாம்பியன் பட்டம் வென்றனர். இவர்கள் அனைவருக்கும் கையடக்கக் கணினி பரிசாக வழங்கப்பட்டன. இதுதவிர பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு 120 கோப்பைகள் வழங்கப் பட்டன.
பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் பியூலா தேவமலர், அகில இந்திய செஸ் சம்மேளன செயலாளர் ஹரிஹரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
தமிழகம்
15 secs ago
இந்தியா
18 mins ago
க்ரைம்
35 mins ago
இந்தியா
45 mins ago
விளையாட்டு
34 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago