நவீன ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுகு நியாயம் செய்யவில்லை: வக்கார் யூனிஸ்

By ஏபி

நவீன ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு அநியாயம் செய்கிறது என்று பாகிஸ்தான் பயிற்சியாளரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் சாடியுள்ளார்.

"வேகப்பந்து வீச்சாளர்கள், ஏன் எந்த ஒரு பந்துவீச்சுக்குமே நவீன கிரிக்கெட் நியாயம் செய்வதில்லை. வட்டத்துக்குள் 5 பீல்டர்கள் எப்போதும் இருத்தல் அவசியம் என்றால் பவுலர்கள் எங்கு பந்தைப் போடுவார்கள்?

கேளிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ என்று நான் யூகிக்கிறேன். மக்கள் பெரிய சிக்சர்களை பார்க்க விரும்புகின்றனர். அதனால்தான் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.

பிட்ச்கள் மட்டையாகி உள்ளது. பேட்ஸ்மென்களின் உடல்தகுதி நன்றாக உள்ளது. மட்டைகளும் அடர்த்தியாக உள்ளது. இப்படியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக நிறைய விஷயங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இது ரசிகர்களை ஈர்க்கும் விதமாகச் செய்யப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஆட்டத்தில் இருதரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், சம அனுகூலங்கள் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன்.”

என்றார் வக்கார் யூனிஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

35 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

33 mins ago

சினிமா

51 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

45 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

59 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்