ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் இந்திய ரசிகர்கள்: சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் உற்சாகம்

By பிடிஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து இதுவரை சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி 15-ம் தேதி நடைபெறுகிறது. அதனைப் நேரில் பார்க்கவே இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றன.

வழக்கமாக கோடை விடுமுறை காலத்தில்தான் சுற்றுலா நிறுவனங்கள் மிகவும் மும்முரமாக செயல்படும். ஆனால் இப்போது உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு அதேபோன்று பல முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கடந்த ஜனவரி முதல் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனவரில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தில் சுற்றுலா விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

க்ரைம்

52 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்