இந்திய அணியினரின் வாய்ப்பேச்சுக்கு ஜான்சன் பதிலடி கொடுத்தார்: ஸ்டீவ் ஸ்மித்

By ஏஎஃப்பி

மிட்செல் ஜான்சன் களமிறங்கிய போது இந்திய வீரர்கள் சிலர் அவர் மீது வார்த்தைகளால் பாய்ந்தனர், அது அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சை மிட்செல் ஜான்சன் புரட்டி எடுத்ததற்குக் காரணம் அவரை இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்து தூண்டிவிட்டதே என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

247/6 என்ற நிலையில் இந்தியப் பந்து வீச்சு ஆக்ரோஷமாகக் காணப்பட்டது. இந்நிலையில் ஜான்சன் களமிறங்க அவர் இறங்கியவுடனேயே இந்திய பீல்டர்களின் ஸ்லெட்ஜிங் தொடங்கி விட்டது.

குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இசாந்த் சர்மா தனது பார்வை, செய்கை மூலமாகவும் ஜான்சனின் கவனத்தை சிதறடிக்க முயன்றனர்.

ஆனால் அது இந்திய அணிக்கு எதிராகப் போய் முடிந்தது. அப்போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த கேப்டன் ஸ்மித் இது பற்றி கூறுகையில், “ஜான்சன் இறங்கி முதல் பந்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆடினார்.

இந்திய அணியினர் அவர் மீது ஆக்ரோஷம் காட்டினர். ஏகப்பட்ட பவுன்சர்களை வீசினர். சிலபல கேலி வார்த்தைகளும் ஜான்சன் காதில் கேட்கும்படியாகப் பேசப்பட்டது.

மிட்செலும் ரோஹித் சர்மாவும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கேலிப் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால் ஜான்சன் இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்தார். நேர்மையாகக் கூறவேண்டுமெனில் ஜான்சனின் பேட்டிங் முன்னால் இந்திய பவுலர்களுக்கு விடை இல்லாமல் போனது.

டெய்ல் எண்டர்கள் இவ்வாறாக பேட்டிங் செய்யும் போது எதிரணியினருக்கு அது ஒரு துர்சொப்பனமாகவே இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்