இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
இலங்கையின் பல்லகெலேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் சங்ககாரா 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் மேத்யூஸ் 40 ரன்களும், தில்ஷான் 35 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவாக வெளியேறியதால் அந்த அணி 49 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 8 ஓவர்களில் 47 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியில் ஜோ ரூட் 104 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக டெய்லர் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
16 mins ago
சுற்றுச்சூழல்
26 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
21 mins ago
விளையாட்டு
42 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
10 hours ago