லீட்ஸில் இன்று நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகள், ஒரு போட்டி ரத்து என 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. ஆனால் இலங்கை அணி 3 வெற்றி, 3 தோல்விகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
இன்று நடத்தப்படும் கடைசி லீக் ஆட்டம் ஒருமுறைக்காகவே இருந்தாலும், இதில் இந்திய அணி வென்றால் பட்டியலில் முதலிடத்தைப்பிடித்து, கடைசி இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அணியுடன் மோத முடியும்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இலங்கை அணியில் வான்டர்சேவுக்கு பதிலாக திசாரா பெரேரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், யஜுவேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவகையில் தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த் ஆகியோர் உள்ளனர்.
ஆடுகளம் எப்படி
ஆப்கானிஸ்தானுக்கும், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி லீட்ஸில்தான் நடந்து. ஆடுகள் நன்கு காய்ந்து, புற்கல் இன்றியும் இருக்கிறது. சிறிய, சிறிய வெடிப்புகள் மட்டுமே காணப்படுவதால், பேட்ஸ்மேனுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும். முதலில் பேட் செய்யும் அணியின் ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி எளிதில்அடைய முடியும். ஆனால், தற்போது அங்கு மேக மூட்டமாக இருப்பதால், சேஸிங் செய்யும்போது, வேகப்பந்துவீச்சில் பந்துகள் ஸ்விங் ஆகவும் வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago