இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவிடம் ‘ஒயிட் வாஷ்’ நிச்சயம்: கிளென் மெக்ரா

By செய்திப்பிரிவு

இலங்கையை ஒருநாள் தொடரில் இந்தியா 5-0 என்று ‘ஒயிட் வாஷ்’ செய்து துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆகும் என்கிறார் கிளென் மெக்ரா.

இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

"4-0 என்று தோல்வியடையும் என்று சொல்வதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

கடந்த சீசனில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதம் அபாரம். அது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்தியாவுக்கும் ஒயிட் வாஷ் தர முடியும்.

இங்கிலாந்து தொடரில் இந்தியா விளையாடிய கடைசி 3 டெஸ்ட் போட்டிகளைப் பார்த்தேன், முடிவில் சின்னாபின்னமாகிவிட்டனர்.

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா ஒரு தரமான அணிதான். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி கடுமையாக மேம்பாடு பெறுவது அவசியம். குறிப்பாக இங்கு பவுன்ஸ் பிட்ச்களில் அவர்கள் ஆட்டம் முன்னேற்றம் கண்டால்தான் உண்டு.

பவுன்ஸ் பிட்ச்களில் இந்தியா சரியாக விளையாடாததற்கு வரலாற்று சாட்சியங்கள் உள்ளன. ஆகவே இங்கிலாந்தில் ஆடியதை விட அவர்கள் தங்கள் ஆட்டத்தை மேலும் தரநிலையில் உயர்த்துவது அவசியம்.

இல்லையெனில் இங்கு கடுமையான தோல்விகளைச் சந்திக்க வேண்டியதுதான். நம் அணி இந்தியாவில் சந்தித்த தோல்விகளைப் போல” என்று கிளென் மெக்ரா கூறியதை அந்த செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு அதே ஆக்ரோஷம் இருக்குமா என்பதும் சந்தேகமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்