உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை இந்தியா நடத்துகிறது

By பிடிஐ

ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 2 நாள் நிர்வாகக் கமிட்டி கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு, சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் சிங் குவோ வு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2019-ம் ஆண்டில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் சோச்சி நகரில் நடக்கவுள்ளன.

இதைத்தொடர்ந்து இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க 2021-ம் ஆண்டில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, புதுடெல்லியில் நடக்கவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்துவது இது முதல் முறையாகும். முன்னதாக 2006-ம் ஆண்டில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை இந்தியா நடத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்