தீபாவுக்கு அறுவை சிகிச்சை

By பிடிஐ

இந்திய ஜிம்னாஸ்டிக் நட்சத்திர வீராங்கனையான தீபா கர்மகார், தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதனால் அவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீபா கர்மகார் பயிற்சியில் ஈடுபட்ட போது தொடை பகுதியில் உள்ள தசைநாரில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு மும்பையில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் அடுத்த மாதம் 18-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசியசாம்பியன்ஷிப் போட்டியில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தீபா கர்மகார் தனது டுவிட்டர் பதிவில்,

‘சமீபத்தில் நான் பயிற்சியில் ஈடுபட்ட போது காயம் அடைந்தேன். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். விரைவில் பயிற்சியில் ஈடுபடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

தீபா கர்மகார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். இதன் மூலம் ஜிம்னாஸ்டிக்கில் பங் கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். வால்ட் பிரிவில் பங்கேற்ற அவர் 4-வது இடத்தை பிடித்தி ருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

ஓடிடி களம்

32 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்