கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவர் அனுராக் தாகூர், கோவையில் உள்ள ஒரு ஆன்மிக மையத்துக்கு யோகாசன பயிற்சி பெற வந்திருந்தார். பயிற்சியை முடித்துவிட்டு டெல்லிக்கு திரும்பும் வழியில் கோவை விமான நிலையத் தில் நிருபர்களிடம் அவர் கூறியதா வது:
துலீப் டிராபிக்கான பகல் இரவு போட்டிகளில் ‘பிங்க் பால்’ பரீட்சார்த்தமான முறையில் பயன் படுத்தப்பட உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டிகள் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் நியமிக்கப் பட உள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதிக்குள் இந்த பிரத்யேக பயிற்சி யாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கும்ப்ளேயின் செயல்பாடுகளால் இந்திய கிரிக் கெட் அணியில் ஏற்படும் மேம்பாடு களைப் பொறுத்து அவரது பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும். இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் துடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
க்ரைம்
10 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
க்ரைம்
11 hours ago