ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ள 21 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோல் கீப்பர் ஜேஷ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதித்த இந்திய அணி, எப்.ஐ.எச். சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியா சென்று விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் டிசம்பர் 6 முதல் 14-ம் தேதி வரை ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 4 முதல் 19 வரை பெர்த்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வரும் 29-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதுகிறது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 4-ம் தேதியும், எஞ்சிய 3 போட்டிகளும் முறையே 5, 8, 9 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் நரீந்தர் பத்ரா கூறுகையில், “இந்தியா-ஆஸி. இடையிலான இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.
அணி விவரம்கோல் கீப்பர்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங்.
தடுப்பாட்டம்: குர்பஜ் சிங், ரூபிந்தர் பால் சிங், வி.ஆர்.ரகுநாத், பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், குருஜிந்தர் சிங், ஹர்பிர் சிங் சாந்து.
நடுகளம்: மன்பிரீத் சிங், எஸ்.கே.உத்தப்பா, சர்தார் சிங், தரம்வீர் சிங், டேனிஸ் முஜ்தபா, சத்பிர் சிங்.
முன்களம்: நிகின் திம்மையா, எஸ்.வி.சுநீல், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், லலித் உபத்யாய்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago