ஆசியக் கோப்பை 2018-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.
துபாய் சர்வதேச மைதானத்தில் ரசிகர்களுக்கிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டியில் ஹாங்காங்கிடம் போராடி வெற்றி பெற்ற இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் மோத உள்ளன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால், போட்டி நடைபெறுவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் இந்திய - பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே வார்த்தை மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் யானை ஒன்று இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
கராச்சியிலுள்ள சபாரி பூங்காவிலுள்ள யானை இரு நாட்டின் கொடிகள் போர்த்தி வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பாகிஸ்தான் கொடி வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இறுதியாக லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 mins ago
தமிழகம்
16 mins ago
சினிமா
34 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
53 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago