இந்திய அணியின் நட்சத்திரவீரர் ஷிகர் தவன் தனது மனைவி குழந்தைகளுக்கு தெரியாமல் சென்று அவர்களைச் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் 2 மாதம் சுற்றுப்பயணம், அதன்பின், இலங்கையில் முத்தரப்பு டி20 தொடர் என தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை ஷிகர் தவனால் செலவிட முடியவில்லை.
ஷிகர் தவனின் மனைவியும், ஒரு மகனும் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளனர். இந்நிலையில் இலங்கை தொடர்முடிந்தபின், தனது மனைவிக்கும், மகன் ஜோராவேருக்கும் தெரியாமல் சென்று பார்த்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தவன் அளித்துள்ளார். இந்த வீடியோ காட்சியையும் ட்விட்டரிலும், இன்ஸ்ட்டிராகிராமிலும் பகிர்ந்துள்ளார்.
ஷிகர் தவனின் மகன் ஜோராவேர் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒருபள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும் தனது மகனுக்கு தெரியாமல் அங்கு சென்ற ஷிகர் தவன் மகனின் கண்களை இறுக மூடிக்கொண்டார். அதன்பின் கையை விலக்கிவிட்டு தனது தந்தையைப் பார்த்த ஜோரவார் பாசத்தால் அவரைக் கட்டிக்கொண்டு முத்தமழை பொழிகிறார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பெருவாரியாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து தவான் ட்விட்டரில் கூறுகையில், ஏறக்குறைய 15 மணிநேரத்துக்கும் அதிகமாக பறந்துவந்து எனது குடும்பத்தாருக்கு இன்பஅதிர்ச்சி அளித்திருக்கிறேன். அவர்கள் என்னைப் பார்த்தபோது, அவர்களின் உணர்ச்சிப் பெருக்கு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இதற்கு விலை இல்லை. அடுத்த ஒருவாரம் எனது குடும்பத்தாருடன் செலவிடஇருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
2 mins ago
ஓடிடி களம்
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago