2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றது.
2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஸ்டிர்லிங் 55, கெவின் ஓ’பிரைன் 41, நியால் ஓ’பிரைன் 36 ரன்கள் சேர்த்தனர். ரஷித்கான் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகம்மது ஷஹ்சாத் 54, குல்பாதின் நயிப் 45, அஸ்கார் ஸ்டானிக்ஸாய் 39 ரன்கள் சேர்த்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. மேலும் தகுதி சுற்றின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது ஆப்கானிஸ்தான். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அந்த அணி மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
3 hours ago