நான் அதிகம் மதிக்கும் ஒரு கேப்டன் எம்.எஸ்.தோனி: நீதா அம்பானி புகழாரம்

By செய்திப்பிரிவு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நேற்று மும்பை வான்கடேயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை வென்றாலும் ரசிகர்களின் பேராதரவு தோனியினால் சிஎஸ்கே அணிக்கே அதிகமாக இருந்தது.

 ஹர்திக் பாண்டியா உண்மையில் சிலபல திகைப்பூட்டும் ஷாட்களை ஆடினார். கடைசி ஓவரில் 29 ரன்கள் விளாசியது ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பியது. அதோடு மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா, தோனி, ஜாதவ், தீபக் சாஹர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றியை அதன் உரிமையாளர் நீதா அம்பானி பெரிய அளவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

அவர் அப்போது கூறியதாவது: ஒன்று முதல் 12 ஆண்டுகள் இந்தப் பயணத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளேன். நான் அதிகம் மதிக்கும் கேப்டன் எம்.எஸ்.தோனி. ஆகவே அவருக்கு எதிராக நாங்கள் ஆடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஆம் நாங்கள் தோற்றாலும் வென்றாலும் தோனிக்கு எதிராக ஆடுவது சிறப்புதான். இவ்வாறு தோனியை புகழ்ந்தார் நீதா அம்பானி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்