இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியா வின் சாய்னா நெவால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 6-ம் நிலை வீராங்கனையான சீனாவின் பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார்.
சுமார் 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். இறுதிப் போட்டியில் சாய்னா நெவால், ஸ்பெயினின் கரோலினா மரினுடன் இன்று மோதுகிறார்.
கரோலினா மரின் அரை இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுபியை 17-21, 21-11, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
கல்வி
2 hours ago