டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றை யர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியா வின் பி.வி.சிந்து, 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பிவென் ஸாங்கை எதிர்த்து விளை யாடினார். சுமார் 56 நிமிடங் கள் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் சிந்து 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி யடைந்து தொடரில் இருந்து வெளி யேறினார். பிவென் ஸாங்கிடம் தொடர்ச்சியாக 3-வது முறையாக சிந்து தோல்வியடைந்துள்ளார்.
11-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில், 24-ம் நிலை வீராங்கனையான ஹாங்காங்கின் நன் யி செயுங்கை எதிர்த்து விளையாடினார். இதில் சாய்னா கடுமையாக போராடி 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
25 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
58 mins ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago