காமன்வெல்த் போட்டியின் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-7, 12-10, 11-3 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் யாங் ஜி-ஜான் ஜியான் ஜோடியைத் தோற்கடித்தது. ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் மற்றொரு ஜோடியான காவ் நிங்-லீ ஹூ ஜோடியை சந்திக்கிறது.
ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஷரத் கமல் 11-5, 11-6, 11-7, 11-4 என்ற நேர் செட்களில் நைஜீரியாவின் செகுன் டோரிலாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 3-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 11-5, 2-11, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் உலகின் 6-ம் நிலை வீரரான சிங்கப்பூரின் லீ ஹுவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்து காலிறுதியை உறுதி செய்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago