முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி

By செய்திப்பிரிவு

துபை சூப்பர் சீரிஸ் பைனல் தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பி.வி.சிந்து தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அதேவேளையில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

ஆண்டின் கடைசி பாட்மிண்டன் தொடரான சூப்பர் சீரிஸ் பைனல் துபையில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரராங்கனையான பி.வி.சிந்து தனது முதல் ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான சீனாவின் பிங்க்ஜியோவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை சிந்து 21-11 என கைப்பற்றினார். 2-வது செட்டில் பிங்க்ஜியோ பதிலடிகொடுத்து 21-16 என அந்த செட்டை கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் ஆட்டம் பரபரப்பானது. மிக நெருக்கமாக நடைபெற்ற இந்த செட்டை சிந்து 21-18 என தனதாக்கினார். முடிவில் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் சிந்து 21-11, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 4-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்சல்செனை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 13-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்