ஏடிபி பைனல்ஸ் தொடரில் ரபேல் நடால் விலகல்

By செய்திப்பிரிவு

ஏடிபி பைனல்ஸ் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகியுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் முதல் ஆட்டத்தில் 6-7, 7-6, 4-6 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினிடம் வீழ்ந்தார். முழங்கால் காயம் காரணமாக கடந்த வாரம் நடைபெற்ற பாரிஸ் தொடரின் பாதியிலேயே நடால் விலகியிருந்தார். இதனால் அவர், ஏடிபி பைனல்ஸ் தொடரில் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவிய நிலையில் உடற்தகுதியை காரணமாக கொண்டு விலகி உள்ளார்.

31 வயதான நடால், ஒற்றையர் பிரிவில் 16 கிராண்ட் ஸ்லாம் உட்பட 75 பட்டங்கள் வென்றுள்ளார். ஆனால் ஒருமுறை கூட அவர், ஏடிபி பைனல்ஸ் தொடரில் வாகை சூடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் கூறும்போது, “இந்த சீசன் எனக்கு முடிவடைந்துவிட்டது. இந்த தொடரில் நான் விளையாட தயாராக இருப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டியது இருந்தது. இதற்காக கடினமாக முயன்றேன். முழங்காலில் வலி அதிகரித்ததால் விளையாடுவதற்கு போதுமான வலு என்னிடம் இல்லை. ஆனால் ஆட்டம் மிக நெருக்கமாக அமைந்தது அதிசயம் தான். ஆனால் அதில் எந்த பலனும் இல்லை” என்றார். - ஏஎப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

கருத்துப் பேழை

39 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

2 hours ago

மேலும்