காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் உட்பட 3 பதக்கங்களையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா 222.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்ற இந்திய வீரர்களான அமன்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கமும், ஜிது ராய் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். இந்தத் தொடரில் நேற்று முன்தினம் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப் பதக்கமும், ஸ்வப்னில் சுரேஷ் வெண்கலப் பதக்கமும், மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அனுராஜ் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.
2-வது நாளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பூஜா தங்கமும், அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ரிஸ்வி, ஓம்கார் சிங், ஜிது ராய் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியிருந்தனர்.
முதல் நாளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்பிரிவில் ஹீனா சித்து தங்கமும், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தீபக் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
44 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago