4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயில் திருத்தேரோட்டம்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோயிலில் கடந்த 1-ம் தேதி முன்னை முதல்வன் வழிபாடும் திருமண எடுத்ததலும், 2-ம்தேதி ஐம்பெரும் கடவுளர்கள் காட்சியும், கொடியேற்றம் நடைபெற்றது. 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பல்வேறு வாகனங்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (6-ம் தேதி) காலை திருக்கார்த்திகையை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் பக்தர்கள் அரோகரா அரோகரா என வடம் பிடித்து 4 வீதிகள் வழியாக தேர் நிலைக்கு இழுத்துச் சென்றனர்.

தொடர்ந்து, இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், தீபக்காட்சியும் நடைபெற்றது. 7-ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 8-ம் தேதி காலை சுவாமி பரிவாரங்களுடன் யதஸ்தானம் செல்வது நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் சு.மோகனசுந்தரம், துணை ஆணையர் தா உமாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்