வழக்கில் வெற்றி தரும் பைரவாஷ்டகம்

By வி. ராம்ஜி

தேய்பிறை அஷ்டமியிலும் திங்கட்கிழமைகளிலும் பைரவாஷ்டகம் பாராயணம் செய்து பைரவரை வேண்டிக்கொள்ளுங்கள். தெருநாய்களுக்கு உணவளித்து வாருங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். காரியத்தடைகள் விலகி எடுத்த காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் பைரவர்.

பொதுவாகவே அஷ்டமி திதியில், முக்கிய காரியங்களைச் செய்யமாட்டோம். ஆனால், அஷ்டமியில் பக்தர்கள் செய்யும் முக்கியமான காரியம்... வழிபாடு. அதுவும் பைரவ வழிபாடு.

அஷ்டமி என்பது பைரவருக்கான நன்னாள். பைரவரை வணங்கி வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். ஒவ்வொரு மாதமும் இரண்டு அஷ்டமிகள் வரும். அஷ்டமி திதி நாளில், பைரவரை வணங்குவது சிறப்பு வாய்ந்தது மகத்துவம் மிக்கது என்றாலும் அமாவாசைக்குப் பிறகு வரும் அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி. பெளர்ணமிக்குப் பிறகு வருகிற அஷ்டமி தேய்பிறை அஷ்டமி. இந்த இரண்டு அஷ்டமியுமே பைரவ வழிபாட்டுக்கு உகந்தது என்றபோதும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் பன்மடங்கு பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

புராண காலத்திலேயே பைரவர் குறித்த மகிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. புராதனமான காலத்திலேயே மன்னர்களின் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்களில், பைரவரின் சந்நிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த பல வருடங்களாகத்தான், பைரவ வழிபாடு குறித்த எண்ணங்களும் வழிபாடுகளும் பக்தர்களிடையே அதிகரித்திருக்கின்றன.

பல ஊர்களில் பைரவருக்கென தனிக்கோயிலே அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே தினமுமே சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. காசி க்ஷேத்திரத்தின் பைரவர் மிக மிக சாந்நித்தியம் நிறைந்தவர். அதேபோல், தமிழகத்தின் பல ஆலயங்களிலும் உள்ள பைரவர்களுக்கு ஆராதனைகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம்.
பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கால பைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥


பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
நிர்மலம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
நாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்॥

நாளைய தினம் 6ம் தேதி புதன் கிழமை, தேய்பிறை அஷ்டமி. பைரவரை வணங்குவோம். பயம் அனைத்தையும் நீக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருளுவார்; வழக்கில் வெற்றியைக் கொடுப்பார் காலபைரவர்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

25 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்