ஜோதிடம் அறிவோம்! 25: இதுதான்... இப்படித்தான்! வஸ்திர தானம் செய்தால் குழந்தை பாக்கியம்!

By ஜெயம் சரவணன்

வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். நன்றிகள்.

இது 25வது அத்தியாயம். உங்கள் ஆதரவினால்தான் இதைத் தொடர முடிகிறது, எனவே தொடர்ந்து ஆதரவைத் தந்து ஜோதிட உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சென்ற பதிவில் குரு பகவானுக்கான பரிகாரமுறைகளைக் கூறினேன். இந்தப் பரிகாரங்கள் எல்லாம் எளிமையானவை. செலவில்லாமல் நன்மை தருபவை. முறையாகவும், முழு நம்பிக்கையோடும் செய்து வந்தால், நன்மைகள் நடக்கும் என்பது நிச்சயம். சத்தியம்.

இனி, சூரியன் முதற்கொண்டு வரிசையாக கிரகங்கள் ஏற்படுத்தும் புத்திரத் தடையையும், அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சூரியன்:- இவர்தான் ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர் என்னும் ஜீவனையேத் தருபவர்,

ஜாதகத்தில் லக்னம் என்பது குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியனின் ஒளிப்புள்ளி நின்ற ராசியே லக்னம் என்னும் உயிர் ஜனித்த புள்ளி.

ஆக இவர்தான் ஒரு உயிர் உருவாக முக்கியக் காரணம். விந்துவில் உள்ள உயிரணுக்களில் உள்ள ஜீவ சக்தி சூரியன் அம்சம்.

கருமுட்டை சந்திர அம்சம் ஆகும். இதை பிறகு விரிவாக பார்ப்போம்.

சூரியன்-சிவம்

சந்திரன்- சக்தி

இந்த இரு சக்தியும் இணையும் போது சிவசக்தி என்னும் உயிர் உருவாகிறது.

அதனால்தான் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மை உண்டு.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் குணம் உண்டு.

சரி... இப்போது சூரியன் எப்படி புத்திர பாக்கியத்தில் தடை அல்லது தாமதத்தை தருகிறார் என்பதைப் பார்க்கலாம்.

உயிர் அணுக்கள் சுக்கிர அம்சம்( அணுவில் உள்ள ஜீவ சக்தி சூரியன்) ஜாதகத்தில் சுக்கிரன், சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் அடைந்தால், இந்த உயிரணுக்கள் பிரச்சினை ஏற்படும், அதாவது பலம் இழந்து போகும்.

இது மருத்துவ பரிசோதனையில் மட்டுமே அறிந்து கொள்ளமுடியும் என நினைத்திருப்போர்க்கு ஜாதகத்தை பார்த்த உடனே கண்டுபிடிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது சூரியனின் சக்தியால் சுக்கிரனுக்கு ஏற்படும் தோஷம். எனவே இதற்கு என்ன பரிகாரம்?

சுக்கிரனின்விருட்சம்அத்திமரம்,

சூரியனின்விருட்சம்எருக்கு.

இருந்தாலும் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவர்களின் மரங்கள்:-

கார்த்திகை - அத்திமரம்

உத்திரம் - அலரி

உத்திராடம் - பலாமரம்

இதில் ஒரு ஒற்றுமை அத்தி மட்டுமே. எனவே அத்திப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தாலே உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. மேலும் சித்தர்கள் பரிந்துரைத்ததும் அத்திப்பழத்தையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பலாப்பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

அத்திமரத்துக்கு தண்ணீர் விட்டு வந்தாலும், முடிந்தால் வளர்த்து வந்தாலும் நன்மைகள் ஏற்படும்.

கார உணவுகளைத் தவிர்ப்பது, பித்தம் தரும் உணவுகளைத் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.

சூரியன் உதிக்கும் அதிகாலையில் சூரியனைப் பார்த்து வணங்குவது நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரைத் தரிசிப்பது நற்பலன்களை வழங்கும்.

இனி, சந்திரனால் உண்டாகும் தோஷம் என்னவென்று பார்ப்போம்.

சந்திரன், சுக்கிரனோடு இணையும் போது விந்து நீர்த்துப் போகும்,

ஆணின் உயிரணுக்கள் நீர்த்துப் போவதால் உயிரணுக்களின் வேகம் குறையும். அதனால் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படும். இதற்கு என்ன பரிகாரம்?

சந்திரனின்விருட்சம்கல்யாணமுருங்கை,முருங்கை,

முருங்கைக் கீரைக்கு விந்துவை கெட்டிப்படுத்தும் சக்தி உண்டு. மேலும் நாட்டு மருந்துக் கடைகளில் முருங்கை பிசின் விற்பனை செய்யப்படுகிறது. இதைச் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலனைத் தரும்.

பௌர்ணமி மற்றும் வளர்பிறை திருதியை திதி நாளன்று திருப்பதி சென்று இரவு தங்கி பெருமாளை தரிசித்துவர புத்திர பாக்கியம் உண்டாகும்.

வயதான பெண்களுக்கு உடை(வஸ்திரம்) தானம், பச்சரிசி தானம் தருவது சந்தான பாக்கியத்தை வழங்கவல்லது.

புகழ்பெற்ற, பழமையான, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அம்மன் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபடுங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள்.

இன்னும் கிரகங்கள் தரும் பலவீனங்களையும், பெண்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பதையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்!

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779

- தெளிவோம்

இதன் அடுத்த அத்தியாயம் வரும் 28.3.18 புதன்கிழமை அன்று வெளியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்