பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஆராதனை நாள் இன்று. திருவண்ணாமலை மகான், கடவுளின் குழந்தை, விசிறி சாமியார் என்றெல்லாம் போற்றி வணங்கப்படும் பகவான் யோகி ராம்சுரத்குமார் இந்த ஆராதனை நாளில், மனதாரப் பிரார்த்திப்போம்.
இந்த நாளில், யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா என்று அந்த மகானை, கடவுளின் குழந்தையைக் கூப்பிட்டு வேண்டுவோம். நம் எல்லா நலனையும் தந்தருள்வார் பகவான் யோகி ராம்சுரத்குமார்! நம்மை மனோபலத்துடனும் மனத்தெளிவுடனும் வாழ அருள்வார் பகவான்!
* கடவுளின் லீலை, சரியாகவே நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், கடவுள் நிறைநிலையில் உள்ளவர். அவர் எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும்.
* ஒருவன், தான் ,மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கடவுளை சந்தோஷப்படுத்த வேண்டும். கடவுளை சந்தோஷப்படுத்துவது என்பது அவரின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதே!
* அப்பாவின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்போம். வேதனை, கஷ்டம் எல்லாம் சரியாகப் போகும். யோகி ராம்சுரத்குமார், இந்தப் பிச்சைக்காரனுடைய பெயர் இல்லை. அப்பாவின் பெயர். அதைச் சொல்லிக் கூப்பிட்டால், உடனே உதவிக்கு வருவார் அப்பா.
*கடவுள் உன்னை எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதுடன் அதற்காக நீ நன்றியுடன் இருக்கவேண்டும். நடப்பவை எல்லாம் அவரின் ஆசீர்வாதமே!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஆராதனை நன்னாளான இன்று (14.3.18) பகவானை நினைப்போம். பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் போற்றுவோம்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா எனும் திருநாமத்தைச் சொல்லுவோம்.
ஏதோவொரு ரூபத்தில், சூட்சுமமாக வந்து நமக்கு அருள் வழங்குவார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
ஜோதிடம்
3 mins ago
ஜோதிடம்
56 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
3 hours ago