சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கடகம்

By வேங்கடசுப்பிரமணியன்

ல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்து விட்டால் பதுங்கமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து பல வகைகளிலும் அலைக்கழித்த சனி பகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். இனி பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.

குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு மாறுவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அடிவயிற்றில் வலி இருந்ததே! அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்கியம் கூடும். குடும்பத்திலிருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். விட்டுக் கொடுக்கும் இயல்பு வரும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களிடம் கடனாக வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்களின் வருகை உண்டு. என்றாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் கவுரவம் கூடும். ஆனால் கூடாப்பழக்கம் உள்ளவர்களைத் தவிர்க்கப்பாருங்கள்.

சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிரவேண்டாம். சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் சனி செல்வதால் மன உளைச்சல், டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் தனஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும்.

எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனி பகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் பழைய பிரச்சினைகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

மாணவ, மாணவிகளே! உங்களின் திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மதிப்பு கூடும்.

கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும்.

உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும். சம்பள உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு மகுடம் சூட்டும்.

பரிகாரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்துக்கு அருகிலுள்ள குருசுவாமி பாளையம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமியையும் அருள்மிகு வள்ளி, தெய்வானையையும் கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று அன்னதானம் வழங்கி வழிபடுங்கள். அங்கிருக்கும் ஸ்ரீசனீஸ்வரபகவானையும் வணங்குங்கள். முன்னேற்றமும், நிம்மதியும் நிச்சயம் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

52 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்