வார ராசிபலன் 23/11/2017 முதல் 29/11/2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By பெருங்குளம் ராமகிருஷ்ணன்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தின் மூலம் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் ராசிநாதன் சுக்கிரன், செவ்வாய்-சூரியனுடன் திரிகோண சம்பந்தம் பெறுவதால் தொடக்கத்தில் காரியங்கள் தடைபட்டாலும் முடிவு சுபமாக இருக்கும்.  வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், தாமதம் ஏற்பட்டாலும் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல்  பொறுப்புகள் கிடைக்கலாம்.  கூடுதலாக உழைத்து வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்திலிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வதால் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில்  எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்களுக்குக்  கல்வியில் சீரான போக்கு காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கத் தடைகள் ஓடிப்போகும்.

 

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் விரய ராசியில் சஞ்சாரம் செய்வதும் தொழில் ஸ்தானாதிபதி சூரியனில் சஞ்சாரம் செய்வதும் நன்மை தருவதாகும். நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்விகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம், ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிதானம் காணப்படும். போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றமும் உத்தியோக மாற்றமும் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாகப் பேச வேண்டும். வழக்குகளில் மெத்தனம் தொடரும். பெண்களுக்கு  எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்குப் பயணங்களால் அலுப்பு உண்டாகும். அரசியல்வாதிகள் மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்குத்  தடைகளை தாண்டி கல்வியை கற்கும் முயற்சி வெற்றி பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 6, 9

பரிகாரம்:  முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

 

 

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு லாப்ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்குகளில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண்பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் வரலாம். ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. பெண்களுக்குத் தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்குப் பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்குத் தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண ஆர்வம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் திறமை வெளிப்படும்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்:  வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

 

 

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் பார்வை பெறுவதால் பணவரத்து சீராக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தவரிடம் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில், வியாபாரத்தில் பங்காளிகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து சென்றால் நன்மை உண்டாகும் . இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றைக் கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள், வாக்குவாதம் உண்டாகும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு  வீண் அலைச்சல், வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினர் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் எடுத்த வேலையை முடிப்பதில் சிரமம் ஏற்படலாம். மாணவர்கள் விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர கஷ்டங்கள் நீங்கும்.

 

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசி குரு பார்வை பெறுவதால் தடைபட்ட காரியங்கள் தொடரும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். திருமணம் தொடர்பான காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். பெண்களைப் பொறுத்தவரை சின்ன வேலையும் சிரமம் தரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும் அரசியல்வாதிகள் பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து படிக்கவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம்

எண்கள்: 1, 3

பரிகாரம்:  வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்க வேண்டும்.

 

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பணத்தேவை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் பதற்றம் தருவதாக இருக்கலாம். மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பெண்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினர் வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் கொண்ட கொள்கையில் மாறாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு  சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்