விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரைத் தரிசித்த நயன்தாரா

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்தி வரதரை நடிகை நயன்தாரா தரிசித்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தில் நாற்பத்தி ஐந்தாவது நாளாக வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். கடந்த ஜூலை 1-ம் தேதி அன்று அத்திவரதரின் தரிசனம் தொடங்கியது. அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற இன்னும் 2 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரைத் தரிசித்தனர்.

கடந்த 14-ம் தேதி நிலவரப்படி, இதுவரை 90 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் என பல பிரபலங்களும் அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்தார்.

இந்நிலையில் நேற்று (ஆக. 14) இரவில் நடிகை நயன்தாரா, இயக்குநரும் நண்பருமான விக்னேஷ் சிவனுடன் அத்தி வரதரைத் தரிசித்தார். அவர் தரிசித்த சில நிமிடங்களிலேயே, அவர் ஆலயத்துக்குள் நடந்து வருவது, அத்தி வரதரைத் தரிசிப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்