தலைவாழை: விதவிதமா விதை உணவு - ஆளி விதைப் பொடி தோசை

By செய்திப்பிரிவு

தொகுப்பு: ப்ரதிமா

விதைகள் எல்லாம் விதைக்கத்தான் எனப் பலரும் நினைத்திருப்போம். சிலர் பூசணி, வெள்ளரி போன்ற தேர்ந்தெடுத்த சில வகை விதைகளை மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், பல வகை விதைகளில் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில விதை உணவு வகைகளைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.

ஆளி விதைப் பொடி தோசை

என்னென்ன தேவை

ஆளி விதை - 1 கப்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
காய்ந்த மிளகாய் - 4
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தோசை மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -  அரை கப்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் ஆளி விதையைப் போட்டுப்  பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் எள், உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றுடன் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

தோசை மாவை தோசைக் கல்லில் ஊற்றி அதன் மேல் வெங்காயம், ஆளி விதைப் பொடி, தக்காளி சாஸ்  ஆகியவற்றைப் பரப்பி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

9 mins ago

சினிமா

7 mins ago

தமிழகம்

29 mins ago

க்ரைம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்