கருட வேகா சர்வதேச நாடுகளுக்கு தனது சேவையைத் தொடங்குகிறது (Sponsored Article)

By செய்திப்பிரிவு


கரோனா கிருமி தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் இருக்கும் எங்கள் அத்தனை கிளைகளும் ஒரே நேரத்தில் மூடப்பட்டன.

தற்போது நம் நாட்டின் பச்சை மண்டலங்களில் இருக்கும் எங்கள் கிளைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். உடனடியாக நீங்கள் உலகில் எந்த இடத்துக்கும் கூரியர் அனுப்பலாம்.

எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை. நாங்கள் எப்போதுமே எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இது போன்ற நிச்சயமில்லா சூழலில் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் தான், கோவிட்-19 நெருக்கடிக்கு நடுவில் நாங்கள் சமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்துதலை சிறப்பாகப் பின்பற்றுகிறோம், செயல்படுத்துகிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின் படி பின்பற்றுகிறோம். எங்கள் அத்தனை கிளைகளையும் தூய்மைப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, எங்கள் ஊழியர்கள் முகக்கவசங்கள், கையுறைகள், அடிக்கடிக் கைகளைக் கழுவுதல் போன்ற தேவையான நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்கிறோம்.

இந்த ஊரடங்கால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும், தேவையான் ஊதியம், உதவி என நாங்கள் எங்கள் ஊழியர்களை சிறந்த முறையில் பார்த்துக் கொண்டோம். அமெரிக்கா, பிரிட்டைன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமீரகம், மத்திய கிழக்கு என 200 நாடுகளில் கருட வேகாவின் சேவை விரிந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற, சிறந்த சேவை எங்களுடையது.

தங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு வர முடியாத வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அனுப்பிவைக்கும் பரிசுகள், சுவையான தின்பண்டங்கள், இனிப்புகள் மூலம் தங்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றனர்.

அந்த மகிழ்ச்சியை, அன்பை அவர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதுவர்களாக கருடபஜாரில் நாங்கள் செயல்படுகிறோம், தொடர்ந்து செயல்படுவோம் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

கருடபஜார் மற்றும் கருடவேகாவுக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்