’ராஜேந்திர சோழனைப் போற்றுவோம்!’ என்ற பாலகுமாரனின் கட்டுரையில், தனக்கே உரித்தான லாவகத்தில் வரலாற்றின் பக்கங்களின் நினைவுகளை ஒரு சரித்திரக் கதையாகக் கூறிய விதம் பிரமிக்க வைத்தது.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போரில், பாண்டிய மன்னனின் மணிமுடியைத் தேடி இலங்கையின் தென்கோடிக்கே சென்று போர் புரிந்து வெற்றிபெற்ற கதை பழையதுதான் என்றாலும், அதனை பாலகுமாரனின் எழுத்தில் ஆதாரங்களுடன் படிப்பது என்பது மிகவும் ரசனையானது.
அன்று கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தந்த பாதிப்பை பாலகுமாரனின் ராஜேந்திர சோழனைப் பற்றிய புதினம் அளிக்கும் என்பதற்கான முன்னோட்டமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
க்ரைம்
25 mins ago
இந்தியா
35 mins ago
விளையாட்டு
24 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago